உத்திரபிரதேசத்தில் 20 வயது பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டார். டெல்லி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் என்ற கிராமத்தில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி 20 வயது தலித் பெண் அவரது குடும்பத்தினருடன் வயல் வெளியில் புல் அறுக்கும் வேலைக்கு சென்றுள்ளார். அப்பகுதியை சென்ற 4 பேர் அந்த பெண்ணை அவரது துப்பட்டாவால் கட்டி இழுத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால், பல எலும்பு முறிவுகளும், நாக்குப்பகுதி வெட்டப்பட்டு முகத்தை சிதைத்துள்ளனர். பெற்றோர்கள் பெண்ணை காணவில்லை என தேடிய நிலையில், வயல் வெளியில் ரத்தத்துடன் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்துள்ளனர். உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவான ஐ.சி.யுவில் சிகிச்சை அளிக்கப்பட்டது வந்துள்ளது.
மேலும், மேல் சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் 2 வாரங்களுக்கு பிறகு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பெற்றோர்கள் காவல்துறையினரிடம் குற்றவாளிகளின் பெயர்களை குறிப்பிட்டு கூறிய பிறகும் உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுக்க வில்லை. அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்ததாக கூறினார். மேலும் குற்றவாளிகளை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.